ஏலகிரி மலையில் கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது
- சிறையில் அடைப்பு
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலை போலீஸ் நிலைய சப் இன்ஸ்பெக்டர் மணி தலைமையில் போலீசார் மலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அத்தனாவூர் பஸ் நிறுத்தம் அருகே சந்தேகத்தின் பேரில் சுற்றி திரிந்த 2 பேரை போலீசார் பிடித்து சோதனை செய்தனர். சோதனையில் அவர்களிடமிருந்து 50 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் ஒரிசா மாநிலம் ரசூல்புரி பகுதியைச் சேர்ந்தவர் சேக் பரூக் (வயது 25). இவர் ஏலகிரி மலையில் உள்ள தனியார் ஓட்டலில் சமையல் மாஸ்டராக பணிபுரிந்து வந்ததும் தெரிந்தது.
மற்றொருவர் ஜோலார்பேட்டை சந்தைகோடியூர் தெருவை சேர்ந்த தருண் (24) என தெரிய வந்தது.
பின்னர் இவர்கள் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் இவர்களிடமிருந்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.