உள்ளூர் செய்திகள்

சாலையோரத்தில் மூதாட்டி பிணம்

Published On 2022-12-06 15:03 IST   |   Update On 2022-12-06 15:03:00 IST
  • அவர் யார்? என்று அடையாளம் ெதரியவில்லை
  • போலீசார் விசாரணை

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை நகராட்சி பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் உணவின்றி தவித்து வந்தார். அவருக்கு பொதுமக்கள் உணவளித்து ஆதரவாக இருந்து வந்தனர்.

இந்த நிலையில் அந்த மூதாட்டி சந்தைக்கோடியூர் பகுதியில் உள்ள சாலை ஓரத்தில் இறந்து கிடந்தார். இதனையறிந்த கிராம நிர்வாக அலுவலர் சிவகுமார் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காதர் கான் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News