கோப்புபடம்.
திருச்செந்தூர் கோவிலில் தரிசன கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - இந்து முன்னேற்ற கழகம் கோரிக்கை
- பல லட்சக்கணக்கான பக்தர்கள் கந்தசஷ்டி விரத நாட்களில் மிக கடுமையான விரதங்களை மேற்கொண்டு திருச்செந்தூர் முருகனைக் கண்டு அருள் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் வருகின்றனர்.
- தரிசன கட்டணத்தை பல மடங்காக உயர்த்தி பக்தர்களுக்கு இடையூறு செய்யும் வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தமிழக அரசை இந்து முன்னேற்ற கழகம் சார்பாக வன்மையாக கண்டிக்கின்றோம்.
திருப்பூர்:
இந்து முன்னேற்றக்கழகத்தின் மாநில இளைஞர் அணி செயலாளர் ராதா எஸ். சுதீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பல லட்சக்கணக்கான பக்தர்கள் கந்தசஷ்டி விரத நாட்களில் மிக கடுமையான விரதங்களை மேற்கொண்டு திருச்செந்தூர் முருகனைக் கண்டு அருள் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் வருகின்றனர். ஆனால் தரிசன கட்டணத்தை பல மடங்காக உயர்த்தி பக்தர்களுக்கு இடையூறு செய்யும் வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தமிழக அரசை இந்து முன்னேற்ற கழகம் சார்பாக வன்மையாக கண்டிக்கின்றோம்.
மேலும் கடவுளை காட்சிப் பொருளாக வைத்துக் கொண்டு அதன் மூலம் லாபத்தை ஈட்டிட இந்து கோவில் ஒன்றும் லாப நோக்கத்துடன் செயல்படும் நிறுவனங்கள் அல்ல என்பதை தமிழக அரசு புரிந்து கொண்டு சிறப்பு கட்டணத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என இந்து முன்னேற்ற கழகம் சார்பாக தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.