திண்டிவனத்தில் பரிதாபம்: குடும்பத்தகராறில் டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை
- திண்டிவனத்தில் குடும்பத்தகராறில் டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- அப்போது அக்கம் பக்கம் உள்ளவர்கள் சமரசம் செய்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் குடிசை பாளையம் பகுதியை சேர்ந்தவர் பூமிநாதன். வேன் டிரைவர். இவர் திண்டிவனம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் வாடகை வீட்டில்அவரது மனைவியை மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் அவர் வேலையை முடித்துவிட்டுவீட்டிற்கு குடித்துவிட்டு வந்தார். அப்போது கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அக்கம் பக்கம் உள்ளவர்கள் சமரசம் செய்தனர். இந்த நிலையில் பூமிநாதன் வீட்டின் அறை கதவை உள்பக்கமாக பூட்டிவிட்டு சென்றவர் வெளியே வரவில்லை.
அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி பூமிநாதன் வெகு நேரம் ஆகியும் வராததால் அக்கம் பக்கம் உதவியுடன் அறையை உடைத்து பார்த்தார். அப்போது பூமிநாதன் தூக்கில் பிணமாக தொடங்கினார். இது குறித்து ரோசனை போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் வந்தனர். பூமிநாதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.