உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

மேகமலை வனப்பகுதியில் 4 நாட்களாக பற்றிஎரியும் காட்டுத்தீயை அணைக்க முடியாமல் திணறல்

Published On 2023-08-08 05:50 GMT   |   Update On 2023-08-08 05:50 GMT
  • கோம்பைதொழு, இந்திரா நகர் பகுதிகளில் பற்றிஎரியும் காட்டுத்தீயால் அரியவகை மரங்கள், மூலிகை செடிகள் எரிந்து சாம்பலாகி வரு கின்றன.
  • வனத்துறையில் ஆட்கள் பற்றாக்குறை மற்றும் தீயை அணைப்பத ற்கான நவீன உபகரணங்கள் இல்லாதது போன்றவற்றால் தீயை அணைக்க முடியவில்லை.

வருசநாடு:

தேனி மாவட்டம் மேகமலை வனப்பகுதியில் கோடைகாலங்களில் அவ்வப்போது தீ விபத்து ஏற்படுவது வழக்கம். தற்போது கடும் கோடை மற்றும் ஆடி மாத காற்று காரணமாக தீ விபத்து ஏற்பட்டு அதனை அணைக்க முடியாமல் வனத்துறை யினர் திணறி வருகின்றனர். கோம்பைதொழு, இந்திரா நகர் பகுதிகளில் பற்றிஎரியும் காட்டுத்தீயால் அரியவகை மரங்கள், மூலிகை செடிகள் எரிந்து சாம்பலாகி வரு கின்றன.

மேலும் வனவிலங்கு களும் இடம்பெயர்ந்து குடியிருப்பு பகுதிக்குள் செல்லும் நிலை ஏற்பட்டு ள்ளது. வனத்துறையில் ஆட்கள் பற்றாக்குறை மற்றும் தீயை அணைப்பத ற்கான நவீன உபகரணங்கள் இல்லாதது போன்றவற்றால் தீயை அணைக்க முடியவில்லை.

தொடர்ந்து பற்றிஎரியும் காட்டுத்தீயால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ள தோடு சமூகஆர்வலர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். காட்டுத்தீ ஏற்படும் சமயங்களில் இயற்கை வளம் அழிந்து வருவதால் வனத்தையும், வனவிலங்கு களையும் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News