- இலையுதிர் காலத்தில் தான் பெரும்பாலான பிள்ளைகள் பிறக்கின்றன.
- மனித சமூகங்கள் கடும் கோடையிலும், கடும் குளிரிலும் பிள்ளைகள் பெற அனுமதிப்பதிப்பதில்லை.
ஒவ்வொரு மிருகமும் கருதரிப்பதையும், பிள்ளை பெறுவதையும், பாலியலையும் சீசனை பொறுத்து தான் செய்யும். ஆண்டு முழுக்க பாலியலில் ஈடுபடுவது மனிதர்கள் தான் என ஒரு கருதுகோள் உண்டு
ஆனால் அது அத்தனை சரியில்லை என்கிறார்கள் விஞ்ஞானிகள். மனித சமூகங்கள் கடும் கோடையிலும், கடும் குளிரிலும் பிள்ளைகள் பெற அனுமதிப்பதிப்பதில்லை. மிதமான தட்பவெப்பம் இருக்கும் இலையுதிர்காலத்தில் தான் பெரும்பாலான பிள்ளைகள் பிறக்கின்றன.
இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் பிள்ளைகள் பிறக்கும் மாதம் செப்டெம்பர். அமெரிக்காவிலும் செப்டெம்பர் தான் அதிக எண்ணிக்கையில் பிள்ளைகள் பிறக்கும் மாதம். ஆஸ்திரேலியாவில் அதிக எண்ணிக்கையில் பிள்ளைகள் பிறக்கும் மாதமும் செப்டெம்பர்தான்.
கோடையில் குறைந்த எண்ணிக்கையில் தான் பிள்ளைகள் பிறக்கின்றன எனவும் பல ஆய்வுகள் கூறுகின்றன.
இதற்கான காரணங்களும் சரிவர தெரியவில்லை. நம்மை அறியாமல் நம்மை பூமியின் காலக்கணக்கு இயக்கி ஆதிக்கம் செலுத்துகிறது. பூமியின் பிள்ளைகள் தானே நாம்?
-நியாண்டர் செல்வன்