கதம்பம்

ஜென்ம நட்சத்திர பரிகாரம்

Published On 2025-03-02 12:02 IST   |   Update On 2025-03-02 12:02:00 IST
  • ஜென்ம நட்சத்திரம் அன்று கோவிலுக்குச் சென்று அர்ச்சனைகள் செய்து வழிபட வேண்டும்.
  • வழிபடுவதால் நம் துன்பங்களின் தாக்கத்தை பெருமளவு குறைத்துக் கொள்ள முடியும்.

வல்லநாடுச் சித்தர் சாதுசிதம்பரம் சுவாமிகள் அருளிய பரிகார விவரங்கள் :

ஒவ்வொரு மாதமும் வரும் நம் ஜென்ம நட்சத்திரம் அன்று கோவிலுக்குச் சென்று நம் நட்சத்திரத்திற்கு அதிபதியான கிரகத்திற்கு அபிசேக, ஆராதனைகள் செய்து, அர்ச்சனை செய்து வழிபட்டால் தடைகள் யாவும் நிவர்த்தியாகும்.

நமது ஜென்ம-நட்சத்திரம் என்பது நம் கர்மாவின் குறிகாட்டியாகும். உண்மையில் நம் ஜென்ம நட்சத்திரமும் அதன் அதிபனும் நமக்கு பிறப்பெனும் துன்பத்தையே உணர்த்துகிறார்கள்.

கடந்த பிறவியில் எந்த நட்சத்திரத்தில், எத்தனையாவது பாகையில் உயிரை விட்டோமோ அதே நட்சத்திரத்தில் அந்த பாகையில் மீண்டும் பிறக்கிறோம்.

எனவேதான் ஜென்ம நட்சத்திரம் அன்று கோவிலுக்குச் சென்று அர்ச்சனைகள் செய்து வழிபட வேண்டும் என்று சொல்லி வைத்தார்கள்.

அவ்வாறு வழிபடுவதால் நம் துன்பங்களின் தாக்கத்தை பெருமளவு குறைத்துக் கொள்ள முடியும்.

ஜோதிட ரீதியாக கிரக பலன்களை வைத்துப் பரிகாரங்கள் சொல்லப்பட்டாலும், ஒவ்வொரு மாதமும் வரும் நம் ஜென்ம நட்சத்திரம் அன்று கோவிலுக்குச் சென்று நம் நட்சத்திரத்திற்கு அதிபதியான கிரகத்திற்கு அபிசேக, ஆராதனைகள் செய்து, அர்ச்சனை செய்து வழிபட்டால் தடைகள் யாவும் நிவர்த்தியாகும்.

நம்பிக்கையோடும், முனைப்போடும் கடைபிடிப்பவர்கள் நல்வாழ்வு பெறுவர் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

நட்சத்திரம் -கிரகஅதிபதி

அஸ்வினி - கேது

பரணி - சுக்கிரன்

கார்த்திகை - சூரியன்

ரோகிணி - சந்திரன்

மிருகசீரிஷம் - செவ்வாய்

திருவாதிரை - ராகு

புனர்பூசம் - குரு (வியாழன்)

பூசம் - சனி

ஆயில்யம் - புதன்

மகம் - கேது

பூரம் - சுக்கிரன்

உத்திரம் - சூரியன்

அஸ்தம் - சந்திரன்

சித்திரை - செவ்வாய்

சுவாதி - ராகு

விசாகம் - குரு (வியாழன்)

அனுஷம் - சனி

கேட்டை - புதன்

மூலம் - கேது

பூராடம் - சுக்கிரன்

உத்திராடம் - சூரியன்

திருவோணம் - சந்திரன்

அவிட்டம் - செவ்வாய்

சதயம் - ராகு

பூரட்டாதி - குரு (வியாழன்)

உத்திரட்டாதி - சனி

ரேவதி - புதன்

-மோகன் கிருஷ்ணமூர்த்தி

Tags:    

Similar News