இந்தியா (National)
null

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை- பத்லாபூர் ஸ்டேஷனில் மக்கள் போராட்டம்

Published On 2024-08-20 09:36 GMT   |   Update On 2024-08-20 12:21 GMT
  • பத்லாபூரில் நான்கு வயது சிறுமிகள் இரண்டு பேர் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • பத்லாபூர் ரெயில் நிலையத்தில் உள்ளூர்வாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பத்லாபூர்:

மும்பை அருகே பத்லாபூரில் உள்ள ஒரு பள்ளியில் நான்கு வயது சிறுமிகள் இரண்டு பேர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை அடுத்து, நகரம் முழுவதும் பந்த் நடத்த அழைப்பு விடுக்கப்படுள்ளது. மேலும் பத்லாபூர் ரெயில் நிலையத்தில் உள்ளூர்வாசிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதன் காரணமாக ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. ரெயில்வே வளாகத்தில் இருந்து போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளதாக சிஆர் அதிகாரிகள் தெரிவித்தனர்.


கொல்கத்தாவில் வசிக்கும் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட கொடூரமான சம்பவத்தால் நாடே தத்தளித்துக் கொண்டிருக்கும் வேளையில், பத்லாபூரில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News