இந்தியா

'தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்' வாசகத்துடன் பாராளுமன்றத்துக்கு டி-சர்ட் அணிந்து வந்த தி.மு.க. எம்.பி.க்கள்

Published On 2025-03-20 13:15 IST   |   Update On 2025-03-20 13:15:00 IST
  • தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான பிரச்சனையை தி.மு.க. உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் எழுப்பி வருகின்றனர்.
  • பாராளுமன்ற வளாகத்தில் இன்றும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுடெல்லி:

மத்திய அரசு பாராளுமன்ற தொகுதிகளை மறு வரையறை செய்யும்போது தென் மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் சூழல் இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்து வருகிறார். இதையொட்டி, தென் மாநிலங்களை சேர்ந்த கூட்டு நடவடிக்கை குழு அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய கூட்டம் சென்னையில் வரும் 22-ம் தேதி நடக்கிறது.

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான பிரச்சனையை தி.மு.க. உறுப்பினர்கள் பாராளுமன்ற மக்களவையில் நேற்று முன்தினம் எழுப்ப முயன்றனர். இதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததால் தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற வளாகத்தில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், பாராளுமன்ற வளாகத்தில் இன்றும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி, திருச்சி சிவா, ஆ.ராசா, வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட தமிழக எம்.பி.க்கள் கலந்துகொண்டனர்.

தொகுதி மறு சீரமைப்பு விவகாரத்தில் நியாயம் தேவை என்ற பேனரை வைத்து இருந்தனர்.

மாநிலங்களின் உரி மையை பாதுகாக்க வேண்டும் என்றும், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்ற வாசகங்கள் எழுதப்பட்ட டி-சர்ட்டுகளை அணிந்து தமிழக எம்.பி.க்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.

தொகுதிகளை குறைக்காதே, மத்திய அரசே தமிழகத்துக்கு துரோகம் இழைக்காதே என்ற முழக்கங்களையும் அவர்கள் எழுப்பினர்.

Tags:    

Similar News