இந்தியா

தொகுதி மறுசீரமைப்பு: அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க ஒடிசா முன்னாள் முதல்வருக்கு அழைப்பு

Published On 2025-03-11 15:34 IST   |   Update On 2025-03-11 15:55:00 IST
  • 7 மாநில முதலமைச்சர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.
  • அழைப்பை ஏற்று கூட்டத்தில் பங்கேற்பதாக நவீன் பட்நாயக் உறுதி அளித்துள்ளதாக மத்திய சென்னை தொகுதி எம்.பி. தயாநிதி மாறன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக அடுத்தக்கட்டமாக நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு 7 மாநில முதலமைச்சர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.

இதனை தொடர்ந்து, தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டத்தில் பங்கேற்குமாறு நவீன் பட்நாயகை சந்தித்து தி.மு.க. குழு அழைப்பு விடுத்துள்ளது.

ஒடிசா முன்னாள் முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தயாநிதிமாறன் ஆகியோர் நேரில் சென்று சந்தித்து அழைப்பு விடுத்துள்ளனர். அழைப்பை ஏற்று கூட்டத்தில் பங்கேற்பதாக நவீன் பட்நாயக் உறுதி அளித்துள்ளதாக மத்திய சென்னை தொகுதி எம்.பி. தயாநிதி மாறன் கூறியுள்ளார்.

Tags:    

Similar News