இந்தியா

உள்மதிப்பீடு தேர்வில் தோல்வி: 300 பயிற்சி ஊழியர்களை நீக்கிய இன்போசிஸ்

Published On 2025-02-07 19:24 IST   |   Update On 2025-02-07 19:24:00 IST
  • மைசூரு வளாகத்தில் அடிப்படை பயிற்சி அளிக்கப்படும்.
  • அதன்பின் கடுயைமான பணியமர்த்தல் செயல்முறைக்கு பிறகு தேர்வில் வெற்றி பெற வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

இந்தியாவின் முன்னணி ஐ.டி. சேவை நிறுவனமான இன்போசிஸ், உள்மதிப்பீடு தேர்வில் தோல்வியடைந்த 300 புதிய ஊழியர்களை (freshers) அதிரடியாக வேலை நீக்கம் செய்துள்ளது. இது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.டி. ஊழியர்களுக்கான சங்கம் (NITES), இன்போசிஸ் கூறியதைவிட புதிதாக வேலையில் அமர்த்தப்பட்டவர்கள் அதிக அளவில் நீக்கப்பட்டனர். இன்போசிஸ் நடவடிக்கைக்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தை நாடுவோம் எனத் தெரிவித்துள்ளது.

புதிதாக வேலையில் சேர்ந்தவர்கள், கடுமையான பணியமர்த்தல் செயல்முறைக்கு பிறகு நிறுவனத்தின் உள்மதிப்பீடு தேர்வுக்கு உட்படுத்தப்படுவார்கள் என பெங்களுருவை தலைமையிடமாக கொண்ட இன்போசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒப்பந்த அடிப்படையில் பயிற்சியாளர்களாக சேர்க்கப்பட்டவர்களுக்கு உள்மதிப்பீடு தேர்வு நடத்தப்படும். மூன்று முறை அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.

மைசூருவில் உள்ள எங்களுடைய வளாகத்தில் விரிவான அடிப்படை பயிற்சிகள் அளிக்கப்படும். அதன்பின் கடுமையான பணியமர்த்தல் செயல்முறைக்கு பின்னர், புதியவர்கள் உள்மதிப்பீடு தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

எங்களுடைய வாடிக்கையாளர்கள் அதிக திறன்வாய்ந்தவர்களை பெறுவதற்கான கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்த தேர்வு முறை நடைமுறையில் உள்ளது என இன்போசிஸ் தெரிவித்துள்ளது.

இந்த ஊழியர்கள் ஏற்கனவே இரண்டு வருடங்கள் காத்திருந்த பின்னர்தான் வேலையில் சேர்வதற்கான ஆஃபர் கடிதம் பெற்றனர். அதுவும் நாங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் தொடர்ந்து வழியுறுத்தியதன் காரணமாக அது சாத்தியமானது என்று NITES தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News