இந்தியா

மகா கும்பமேளா மரண விழாவாக மாறிவிட்டது: மம்தா பானர்ஜி ஆவேசம்

Published On 2025-02-18 16:17 IST   |   Update On 2025-02-18 16:17:00 IST
  • மகா கும்பமேளாவை மதிக்கிறேன். கும்பமேளாவில் சரியான திட்டமிடல் இல்லை.
  • ஏழைகளுக்கு, கும்பமேளாவில் எந்த ஏற்பாடுகளும் இல்லை என்றார்.

கொல்கத்தா:

மேற்குவங்க சட்டசபை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

மகா கும்பமேளா விழா மரண விழாவாக மாறிவிட்டது.

நான் மகா கும்பமேளாவை மதிக்கிறேன். புனிதமான கங்கா மாவை மதிக்கிறேன். கும்பமேளாவில் சரியான திட்டமிடல் இல்லை.

எத்தனை பேர் மீட்கப்பட்டுள்ளனர்?.

பணக்காரர்கள், வி.ஐ.பி. கூடாரங்கள் ₹1 லட்சம் வரை பெற அமைப்புகள் உள்ளன.

ஏழைகளுக்கு, கும்பமேளாவில் எந்த ஏற்பாடுகளும் இல்லை.

ஒரு கும்பமேளாவில் நெரிசல் ஏற்படுவது பொதுவானது. ஆனால் ஏற்பாடுகளைச் செய்வது முக்கியம். என்ன திட்டமிடல் செய்தீர்கள் என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

Tags:    

Similar News