இந்தியா

கர்ப்பம் தரிக்காத மருமகள் விஷம் கொடுத்து கொலை- மாமியார் மீது வழக்கு

Published On 2023-05-09 03:11 GMT   |   Update On 2023-05-09 03:11 GMT
  • கவுசாம்பி மாவட்டத்தில் வசித்த சாலி பேகம் என்ற பெண்ணிற்கு திருமணமாகி 15 ஆண்டுகளாகிறது.
  • போலீசார் சாலிபேகத்தின் கணவர், மாமியார் மற்றும் அவர்களது குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

கவுசாம்பி:

உத்தரபிரதேசத்தின் கவுசாம்பி மாவட்டத்தில் வசித்த சாலி பேகம் (வயது 33) என்ற பெண்ணிற்கு திருமணமாகி 15 ஆண்டுகளாகிறது. ஆனால் அவர் கர்ப்பம் தரிக்கவில்லை. இதனால் அவரது மாமியார், மருமகளிடம் அடிக்கடி வாக்குவாதம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்றும் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது மாமியார், தனது மருமகளின் வாயில் வலுக்கட்டாயமாக விஷம் ஊற்றிவிட்டதாக தெரிகிறது. உடனே இதுகுறித்து சாலி பேகம் தனது சகோதரரிடம் கூறி உள்ளார். அவர் விரைந்து வந்து பார்த்தபோது சாலி பேகம், உயிருக்கு போராடிக்கொண்டு இருந்துள்ளார். உடனே அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து அவரது சகோதரர் நேற்று போலீசில் புகார் அளித்தார். போலீசார் சாலிபேகத்தின் கணவர், மாமியார் மற்றும் அவர்களது குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News