இந்தியா

மொபைல் தேவையாகிவிட்டது: அதேபோல் உடல் உறுப்பு தானம் சமுதாயத்தின் தேவை- துணை ஜனாதிபதி

Published On 2024-08-19 05:24 GMT   |   Update On 2024-08-19 06:00 GMT
  • இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நபரிடமும் மொபைல் போன் இருக்கும் என்று நீங்கள் எப்போதாவது நினைத்தீர்களா?
  • இன்று மொபைல் மூலம் பண பரிவர்த்தனை செய்யும் திறன் உள்ளது. ஏனென்றால் மொபைல் தேவையாகிவிட்டது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பேசும்போது கூறியதாவது:-

உடல் உறுப்பு தானம் உயரும்போது, நம் நாட்டில் திறமையானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மருத்துவ சகோதரத்துவம் உயரும், நிபுணத்துவம் பெறும். மாற்று அறுவை சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்கு மக்கள் செல்வதை நாம் அறிவோம். அது நடக்கக்கூடாது.

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நபரிடமும் மொபைல் போன் இருக்கும் என்று நீங்கள் எப்போதாவது நினைத்தீர்களா?. இன்று கிராமத்தினரிடம் மொபைல் மூலம் பண பரிவர்த்தனை செய்யும் திறன் உள்ளது. ஏனென்றால் மொபைல் தேவையாகிவிட்டது. அதே வழியில் உடல் உறுப்பு தானம் சமுதாயத்தின் தேவை.

இவ்வாறு ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News