இந்தியா
அருணாச்சல் சகோதரிகள்
பாரதியார் பாடலை தமிழில் பாடிய அருணாச்சல் சகோதரிகள் - தமிழில் டுவிட் போட்டு பாராட்டிய பிரதமர் மோடி
- பாரதியார் பாடலை அருணாச்சல பிரதேச பெண்கள் இருவர் தூய தமிழில் பாடுகின்றனர்.
- அவர்களது பாட்டைக் குறிப்பிட்டு பிரதமர் நரேந்திர மோடி தமிழில் பாராட்டியுள்ளார்.
புதுடெல்லி:
ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக, விடுதலை வேட்கை கொண்ட பாடல்கள் மூலம் சுதந்திரத்திற்காக ஏங்கி இருந்த இந்திய மக்களிடையே விடுதலை உணர்வைத் தூண்டியவர் மகாகவி பாரதியார்.
இதற்கிடையே, பாரதியாரின், பாருக்குள்ளே நல்ல நாடு எனும் தமிழ்ப் பாடலை பிழையில்லாமல், தூய தமிழில் அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த இரு பெண் சகோதரிகள் பாடியுள்ளனர்.
இந்நிலையில், இதனை டுவிட்டரில் பார்த்த பிரதமர் மோடி, 'இதைக் கண்டபோது நான் பெருமகிழ்ச்சியும் உவகையும் கொண்டேன். ஒரே இந்தியா, உன்னத இந்தியா கோட்பாட்டை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் வகையில் தமிழில் பாடியுள்ள அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் சக்தியின் நட்சத்திரங்களுக்கு எனது பாராட்டுக்கள்' என தமிழில் பாராட்டி அசத்தியுள்ளார்.