இந்தியா

உலகின் சிறந்த மொழி சமஸ்கிருதம் என்று கூறினார்.. சூஃபி கவிஞர் விழாவில் பேசிய பிரதமர் மோடி

Published On 2025-03-01 08:11 IST   |   Update On 2025-03-01 08:11:00 IST
  • அமீர் குஸ்ராவை நினைவுகூரும் ஜஹான்-இ-குஸ்ராவின் 25வது எடிசனின் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
  • இந்தியாவின் தத்துவம் மற்றும் கணித கண்டுபிடிப்புகள் உலகம் முழுவதும் சென்றடைந்துள்ளன என்று மோடி தெரிவித்தார்.

பிரபல சூஃபி கவிஞரும் அறிஞருமான அமீர் குஸ்ராவை நினைவுகூரும் ஜஹான்-இ-குஸ்ராவின் 25வது எடிசனின் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

அவ்விழாவில் பேசிய பிரதமர் மோடி, "சூஃபி பாரம்பரியம் இந்தியாவில் தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தை கொண்டுள்ளது. 13 ஆம் நூற்றாண்டில் பிறந்த குஸ்ரா, இந்தியா வேறு எந்த நாட்டையும் விட உயர்ந்தது என்றும், அதன் அறிஞர்கள் மற்றவர்களை விட சிறந்தவர்கள் என்றும், சமஸ்கிருதம் உலகின் சிறந்த மொழி என்றும் பாராட்டினார், இந்தியாவின் தத்துவம் மற்றும் கணித கண்டுபிடிப்புகள் உலகம் முழுவதும் சென்றடைந்துள்ளன" என்று தெரிவித்தார்.

மேலும், வரவிருக்கும் இஸ்லாமிய புனித மாதமான ரம்ஜானை ஒட்டி முஸ்லீம் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். 

Tags:    

Similar News