அத்தைகளை வன்புணர்வு செய்ய முயன்ற மகன்.. 5 துண்டுகளாக வெட்டி வீசிய தாய் - ஆந்திராவில் கோரம்
- சித்தி பெரியம்மா மற்றும் உறவினர்களிடம் பிரசாத் தவறாக நடக்க முயற்சித்து வந்தார்.
- இதை அறிந்த பிரசாத்தின் தாய், இப்படிப்பட்ட மகன் தனக்கு தேவையே இல்லை என முடிவெடுத்துள்ளார்.
அத்தைகளை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மகனை தாய் கொலை செய்து 5 துண்டுகளாக வெட்டி வீசிய சம்பவம் ஆதிராவில் நிகழ்ந்துள்ளது.
ஆந்திராவின் பிரகாசம் மாவட்டம் கம்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஷ்யாம் பிரசாத்தை (35). துப்புரவு பணியாளராக இவர் பணி செய்து வந்தார். இவரின் தாயார் லட்சுமி தேவி (57). ஐதராபாத்,நரசராவ்பேட்டை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் உள்ள தனது அத்தைகள், சித்தி பெரியம்மா மற்றும் உறவினர்களிடம் பிரசாத் தவறாக நடக்க முயற்சித்து வந்தார்.
ஐதராபாத் மற்றும் நரசராவ்பேட்டாவில் உள்ள தனது அத்தைகள் இருவரை பிரசாத் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது. இதை அறிந்த பிரசாத்தின் தாய், இப்படிப்பட்ட மகன் தனக்கு தேவையே இல்லை என முடிவெடுத்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி தனது மகனை கோடாரி போன்ற கூர்மையான ஆயுதத்தால் தாக்கினார். இதில் பிரசாத் உயிரிழந்தார். உறவினர்களின் உதவியுடன் மகனின் உடலை 5 துண்டுகளாக வெட்டி சாக்கு மூட்டையில் கட்டி கிராமத்திற்கு அருகில் உள்ள நகலகண்டி கால்வாயில் வீசியுள்ளார்.
இதுதொடர்பாக தற்போது தகவலறிந்த போலீசார் பிரசாத்தின் வெட்டப்பட்ட உடல் பாகங்களை கால்வாயில் இருந்து மீட்டனர். குற்றத்தில் ஈடுபட்ட பிரசாத்தின் தாய் மற்றும் உறவினர்கள் அனைவரும் தலைமறைவாக உள்ளனர். அவர்கள் மீது ஐபிசி சட்டம் 103 மற்றும் 238 பிரிவுகளின் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.