இந்தியா

ஐந்து நாட்களில் 770 கோடி ரூபாய் அதிகரித்த சந்திரபாபு நாயுடு குடும்பத்தின் சொத்து மதிப்பு

Published On 2024-06-08 06:34 IST   |   Update On 2024-06-08 06:34:00 IST
  • ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவனத்தின் பங்கு 424 ரூபாயில் இருந்து, 661.25 ரூபாயாக உயர்ந்துள்ளது.
  • சந்திரபாபு நாயுடு இந்த நிறுவனத்தின் 2,26,11,525 பங்குகளை வைத்துள்ளார்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற மாநில தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி அமோக வெற்றி பெற்றது. அதேபோல் மக்களவை தேர்தலில் 18 இடங்களை கைப்பற்றி என்டிஏ கூட்டணியில் 2-வது பெரிய கட்சியாக விளங்குகிறது. சந்திரபாபு நாயுடு கிங் மேக்கராக திகழ்கிறார்.

சந்திரபாபு நாயுடு கட்சியின் வெற்றியில் அவரது மனைவி மற்றும் மகனின் சொத்து மதிப்பு மிகப்பெரிய அளவில் வளர்ச்சியை கண்டுள்ளது.

சந்திரபாபு நாயுடுவால் தொடங்கப்பட்டது ஹெரிடேஜ் ஃபுட்ஸ் (Heritage Foods). இந்த நிறுவனத்தின் முக்கிய பங்குதாரர்களாக அவரது மனைவி புவனேஷ்வரி மற்றும் அவரது மகன் லோகேஷ் இருந்து வருகிறார்கள்.

மும்பை பங்குச் சந்தையின் தரவுகளின்படி புவனேஷ்வரியுடன் 2,26,11,525 பங்குகள் உள்ளன. லோகேஷிடம் 1,00,37,453 பங்குகள் உள்ளன.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பால் திங்கட்கிழமை பங்குகள் உயர்வை கண்டன. கடந்த ஜூன் 3-ந்தேதி ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவனத்தின் ஒரு பங்கு 424 ரூபாயாக இருந்தது.

வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற ஜூன் 4-ந்தேதி ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவனத்தின் பங்கு மளமளவென உயரத் தொடங்கியது. இதற்கு முக்கிய காரணம் சந்திரபாபு நாயுடு கட்சி மாநில தேர்தலில் அமோக வெற்றி பெற்றதுதான். இறுதியாக நேற்று வெள்ளிக்கிழமை 661.25 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

இதனை வைத்து பார்க்கும்போது புவனேஷ்வரின் சொத்தி மதிப்பு 535 கோடி ரூபாய் உயர்ந்துள்ளது. லோகேஷின் சொத்து மதிப்பு 237 கோடி ரூபாய் உயர்ந்துள்ளது.

தேர்தல் முடிவில் கடந்த ஐந்து நாட்களில் சந்திரபாபு நாயுடு குடும்பத்தின் சொத்து மதிப்பு 770 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவனம் பால் தொடர்பான வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஒடிசா, டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், உத்தரகாண்ட், உத்தர பிரதேசம் என பெரும்பாலான மாநிலங்களில் பால் விற்பனை செய்து வருகிறது.

Tags:    

Similar News