கிரிக்கெட் (Cricket)

சாம்பியன்ஸ் டிராபி 2025: 50 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் வங்காளதேசம்

Published On 2025-02-20 15:37 IST   |   Update On 2025-02-20 15:37:00 IST
  • இரு அணிகளும் முதல் போட்டியில் மோதுகின்றன.
  • வங்காளதேசத்தை சேர்ந்த 2 வீரர்கள் டக் அவுட்.

சாம்பின்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் நேற்று (பிப்ரவரி 19) தொடங்கியது. நேற்று நடந்த முதல் போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்று அசத்தியது. இந்த நிலையில், இன்று நடைபெறும் போட்டியில் வங்காளதேசம் மற்றும் இந்தியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அந்த அணியின் துவக்க வீரர்களில் ஒருவரான சௌமியா சர்கார் மற்றும் கேப்டன் நஜ்முல் ஹூசைன் ஷாண்டோ ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினர். அடுத்தடுத்த களமிறங்கிய மற்ற வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க வங்காளதேசம் அணி 50 ரன்களை எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது.

இந்திய அணி சார்பில் முகமது சமி மற்றும் அக்சர் பட்டேல் தலா 2 விக்கெட்டுகளையும், ஹர்ஷித் ராணா ஒரு விக்கெட் வீழ்த்தினர். வங்காளதேசம் சார்பில் துவக்க வீரரான தன்சித் ஹாசன் மட்டும் 25 ரன்களை எடுத்தார்.

Tags:    

Similar News