கிரிக்கெட் (Cricket)

சாம்பியன்ஸ் டிராபி: இந்திய அணியில் யாரையாவது நீக்கிவிட்டு வருணை சேர்க்க வேண்டும்- அஸ்வின்

Published On 2025-02-04 16:01 IST   |   Update On 2025-02-04 16:01:00 IST
  • 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
  • இந்தியா - இங்கிலாந்து தொடரின் நாயகனாக வருண் சக்கரவர்த்தி தேர்வு செய்யப்பட்டார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த தொடரின் ஆட்டநாயகனாக தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் சிறப்பாக செயல்பட்ட வருண் சக்கரவர்த்தியை சாம்பியன் டிராபிக்கான இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என முன்னாள் இந்திய வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த டி20 தொடரில் வருண் சக்கரவர்த்தி அபாரமாக செயல்பட்டுள்ளார். தற்போது இந்திய அணி ஒரு தற்காலிக அணியைத்தான் தேர்வு செய்து அனுப்பியுள்ளது. எனவே யாரையாவது ஒருவரை நீக்கிவிட்டு வருண் சக்கரவர்த்தியை சேர்க்க வேண்டும்.

என்று அஸ்வின் கூறினார்.

Tags:    

Similar News