கிரிக்கெட் (Cricket)

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்- இந்திய அணியில் இணைந்த வருண் சக்கரவர்த்தி

Published On 2025-02-04 17:53 IST   |   Update On 2025-02-04 17:53:00 IST
  • சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி 19-ம் தேதி தொடங்குகிறது.
  • இந்த தொடரில் இடம் பெற்றுள்ள 8 அணிகளும் தங்களுடைய தற்காலிக அணியை அறிவித்து விட்டனர்.

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் முடிவடைந்த நிலையில் அடுத்து ஒருநாள் தொடரில் இரு அணிகளும் மோதவுள்ளனர்.

இந்நிலையில் டி20 தொடரில் சிறப்பான பந்து வீச்சின் மூலம் இந்திய அணிக்கான ஒருநாள் தொடரில் அவர் இணைந்துள்ளார். அவர் ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் சேர்க்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறவுள்ளது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை சந்திக்கிறது.

இந்த தொடரில் இடம் பெற்றுள்ள 8 அணிகளும் தங்களுடைய தற்காலிக அணியை அறிவித்து விட்டனர். இதில் வீரர்கள் காயம் காரணமாக விலகினால் மாற்றம் செய்து கொள்ளலாம். வீரர்களை மாற்ற பிப்ரவரி 13-ந் தேதி வரை அனுமதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News