மும்பை ரஞ்சி அணியில் சூர்யகுமார் யாதவ், சிவம் துபே
- இன்னிங்ஸ் மற்றும் 456 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி.
- ஜம்மு காஷ்மீர் அணியிடம் தோல்வியடைந்தது.
அரியாணாவுக்கு எதிரான ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடும் மும்பை அணியில் சூர்யகுமார் யாதவ் மற்றும் சிவம் துபே சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தியா இங்கிலாந்து அணிகள் இடையிலான டி20 தொடரில் பங்கேற்ற நிலையில், சூர்யகுமார் யாதவ் மற்றும் சிவம் துபே இருவரும் மும்பை அணி ரஞ்சி கோப்பையை தக்க வைக்கும் முயற்சியில் ஆளுக்கு ஒரு போட்டியில் விளையாடினர்.
மேகாலயாவுக்கு எதிராக இன்னிங்ஸ் மற்றும் 456 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற மும்பை அணி காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. அதே நேரத்தில் எலைட் குரூப் ஏ-வில் இருந்து நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்ற மற்றொரு அணி ஜம்மு காஷ்மீர் ஆகும்.
அக்டோபரில் மகாராஷ்டிராவுக்கு எதிரான போட்டியில் மும்பை அணியில் சூர்யகுமார் இடம்பெற்றார். சிவம் துபே இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணி கேப்டன் ரோகித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் அடங்கிய நட்சத்திர அணியில் விளையாடினார். மும்பை அணி கடந்த மாதம் சொந்த மைதானத்தில் ஜம்மு காஷ்மீர் அணியிடம் தோல்வியடைந்தது.
மும்பை அணி:
அஜிங்க்யா ரகானே (கேப்டன்), ஆயுஷ் மத்ரே, ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி, அமோக் பட்கல், சூர்யகுமார் யாதவ், சித்தேஷ் லாட், சிவம் துபே, ஆகாஷ் ஆனந்த் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் தாமோர் (விக்கெட் கீப்பர்), சூர்யான்ஷ் ஷெட்ஜ், ஷர்துல் தாக்கூர், ஷம்ஸ் முலானி, டனுஷ் கோட்யன், மோகித் அவாஸ்தி, சில்வஸ்டர் டி சொசா, ராய்ஸ்டன் டயஸ், அதர்வா அங்கொலெகர் மற்றும் ஹர்ஷ் டன்னா.