கிரிக்கெட் (Cricket)

சாம்பியன்ஸ் கோப்பை: 2 முக்கிய வீரர்கள் Absent? ஆஸி.க்கு பெரும் சிக்கல்

Published On 2025-02-05 11:39 IST   |   Update On 2025-02-05 11:39:00 IST
  • ஒவ்வொரு அணியும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
  • சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடுவது கேள்விக்குறியாகி இருக்கிறது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தும் சாம்பியன்ஸ் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி பிப்ரவரி 19-ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் மொத்தம் எட்டு அணிகள் மோதுகின்றன. பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறும் இந்த தொடருக்காக ஒவ்வொரு அணியும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், சாம்பியன்ஸ் கோப்பை 2025 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் பேட் கம்மின்ஸ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் இடம்பெறுவது சந்தேகம் தான் என்று ஆஸ்திரேலிய அணி தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு தெரிவித்துள்ளார்.

காயத்தால் அவதியுற்ற நிலையில், இருவரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடுவது கேள்விக்குறியாகி இருக்கிறது. இரண்டாவது குழந்தை பிறந்துள்ளதை அடுத்து இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து பேட் கம்மின்ஸ் சமீபத்தில் விலகியிருந்தார். இதுதவிர பேட் கம்மின்ஸ் இந்தியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் போது காயமுற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வேகப்பந்து வீச்சாளரான ஜோஷ் ஹேசில்வுட் காயத்தில் இருந்து மீண்டு வருகிறார். இவரும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரில் விளையாடிய போது காயம் ஏற்பட்டதால் பாதியில் விலகினார்.

Tags:    

Similar News