பாகிஸ்தானுக்கு அடிமேல் அடி.. இந்தியாவுக்கு எதிராக நட்சத்திர தொடக்க வீரர் விலகல்
- பாகிஸ்தான் அணி வருகிற 23-ந் தேதி இந்தியாவுடன் துபாயில் மோதுகிறது.
- இந்த போட்டிக்காக பாகிஸ்தான் அணி வீரர்கள் துபாய்க்கு செல்கின்றனர்.
8 அணிகள் பங்கேற்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கட் தொடர் பாகிஸ்தானில் நேற்று தொடங்கியது. கராச்சியில் நடைபெறும் முதல் போட்டியில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் ரிஸ்வான் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 320 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் 260 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்த போது பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் பகர் ஷமான் காயமடைந்தார். இதனையடுத்து சிறிது நேரத்திற்கு பிறகே அவர் களத்திற்கு வந்தார்.
இந்நிலையில் பாகிஸ்தான் அணி வருகிற 23-ந் தேதி இந்தியாவுடன் துபாயில் மோதுகிறது. இந்த போட்டிக்காக பாகிஸ்தான் அணி வீரர்கள் துபாய்க்கு செல்கிறது. இந்த அணியுடன் காயமடைந்த பகர் ஷமான் செல்லவில்லை. அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு மாற்று வீரராக இமாம் உல் ஹக் அணியில் இணைந்துள்ளார். பகர் ஷமான் விலகியது பாகிஸ்தான் அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.