ஐ.பி.எல். 2025: கேப்டன்கள் பெறப்போகும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? முழு பட்டியல்
- ஐ.பி.எல். 2025 முதல் போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.
- ஐ.பி.எல். கோப்பையை வெல்ல பத்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் தொடர் வருகிற 22-ம் தேதி தொடங்குகிறது. இந்த முறை நடக்கும் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. ஐ.பி.எல். தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஒவ்வொரு அணி வீரர்களும் பயிற்சியில் மும்முரம் காட்டி வருகின்றனர்.
பத்து அணிகள் பலப்பரீட்சை நடத்தும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மே மாதம் 25-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
இன்னும் சில நாட்களில் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ள நிலையில், ஒவ்வொரு அணி கேப்டன்கள் பெறும் சம்பளம் எவ்வளவு என்பதை தொடர்ந்து பார்ப்போம்..
ரிஷப் பண்ட் (லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்) ரூ. 27 கோடி
ஸ்ரேயஸ் அய்யர் (பஞ்சாப் கிங்ஸ்) ரூ. 26.75 கோடி
பேட் கம்மின்ஸ் (சன்ரைசர்ஸ் ஐதராபாத்) ரூ. 18 கோடி
ருதுராஜ் கெய்க்வாட் (சென்னை சூப்பர் கிங்ஸ்) ரூ. 18 கோடி
சஞ்சு சாம்சன் (ராஜஸ்தான் ராயல்ஸ்) ரூ. 18 கோடி
அக்சர் பட்டேல் (டெல்லி கேபிட்டல்ஸ்) ரூ. 16.5 கோடி
சுப்மன் கில் (குஜராத் டைட்டன்ஸ்) ரூ. 16.5 கோடி
ஹர்திக் பாண்டியா (மும்பை இந்தியன்ஸ்) ரூ. 16.35 கோடி
ரஜத் பட்டிதர் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு) ரூ. 11 கோடி
அஜிங்கியா ரஹானே (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) ரூ. 1.5 கோடி