மகளிர் பிரீமியர் லீக்: மும்பையை வீழ்த்தியது டெல்லி
- முதலில் ஆடிய மும்பை அணி 9 விக்கெட்டுக்கு 123 ரன்கள் எடுத்தது.
- அடுத்து பேட் செய்த டெல்லி அணி 124 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
பெங்களூரு:
3வது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் பெங்களூருவில் நடந்து வருகிறது. இன்று நடைபெறும் 13-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 123 ரன்கள் எடுத்தது. ஹேலி மேத்யூஸ், ஹர்மன்ப்ரீத் கவுர் தலா 22 ரன்கள் எடுத்தனர். நட் சீவர் பிரண்ட் 18, அமெலியா கெர் 17 ரன் எடுத்தனர்.
டெல்லி அணி சார்பில் ஜெஸ் ஜோனாசென், மின்னு மணி ஆகியோர் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.
இதையடுத்து, 124 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனைகள் இருவரும்
அதிரடியாக ஆடினர்.
முதல் விக்கெட்டுக்கு 85 ரன்கள் சேர்த்த நிலையில் ஷபாலி வர்மா 43 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய ஜெமிமாவுடன் மேக் லேனிங் இணைந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். மேக் லேனிங் அரை சதம் கடந்து அசத்தினார்.
இறுதியில், டெல்லி அணி 14.3 ஓவரில் 124 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.