முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டி: நியூசிலாந்து 243 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்
- பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ரிஸ்வான் 46 ரன்னிலும் சல்மான் 45 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
- நியூசிலாந்து தரப்பில் வில்லியம் ஓரூர்க் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் -நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஃபக்கர் ஜமான்- பாபர் அசாம் ஆகியோர் களமிறங்கினர். இதில் ஃபக்கர் ஜமான் 10 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த சவுத் சஹீல் 8 ரன்னிலும் பாபர் அசாம் 29 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இதனையடுத்து கேப்டன் ரிஸ்வான் - சல்மான் ஆகா ஆகியோர் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ரிஸ்வான் 46 ரன்னிலும் சல்மான் 45 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த தையப் தாஹிர் 38, ஃபஹீம் அஷ்ரஃப் 22, நசீம் ஷா 19 ஆகியோரை தவிர மற்ற வீரர்கள் ஒற்றை ரன்னில் வெளியேறினர். இதனால் பாகிஸ்தான் அணி 49.3 ஓவரில் 242 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து தரப்பில் வில்லியம் ஓரூர்க் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.