கிரிக்கெட் (Cricket)

சாம்பியன்ஸ் டிராபியில் ஷிகர் தவான் சாதனையை முறியடிப்பாரா விராட் கோலி

Published On 2025-02-16 01:20 IST   |   Update On 2025-02-16 01:20:00 IST
  • பாதுகாப்பு கருதி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்கான ஆட்டங்கள் துபாயில் நடக்கிறது.
  • கராச்சியில் தொடங்கும் முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

புதுடெல்லி:

9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் வரும் 19-ம் தேதி முதல் மார்ச் 9-ம் தேதி வரை நடக்கிறது.

இதில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

பாதுகாப்பு கருதி இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்கான ஆட்டங்கள் துபாயில் அரங்கேறுகிறது.

கராச்சியில் நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் (19-ம் தேதி) பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபியில் விராட் கோலி இதுவரை 529 ரன்கள் அடித்துள்ளார். இந்தத் தொடரில் 173 ரன்கள் அடித்தால் சாம்பியன்ஸ் டிராபியில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைப்பார்.

இந்தப் பட்டியலில் ஷிகர் தவான் 701 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், விராட் கோலி இந்தத் தொடரில் இன்னும் 37 ரன் அடித்தால் 14,000 ரன்களை கடந்த 3-வது வீரராக சாதனை படைப்பார். இந்தத் தொடரில் இன்னும் 263 ரன்கள் அடித்தால் சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைக்க உள்ளார். இந்தப் பட்டியலில் வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெயில் 791 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

Tags:    

Similar News