கிரிக்கெட் (Cricket)
null

ஆகாஷ் ஆனந்த் சதம்- 270 ரன்களில் மும்பை ஆல் அவுட்.. 113 ரன்கள் முன்னிலை பெற்ற விதர்பா அணி

Published On 2025-02-19 12:21 IST   |   Update On 2025-02-19 12:21:00 IST
  • சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆகாஷ் 106 ரன்களில் ஆட்டமிழந்தார்.
  • விதர்பா அணி தரப்பில் பார்த் ரேகாடே 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

நாக்பூர்:

ரஞ்சி கிரிக்கெட்டில் நடப்பு சாம்பியன் மும்பை- விதர்பா அணிகள் இடையிலான அரையிறுதி ஆட்டம் நாக்பூரில் நேற்று முன் தினம் தொடங்கியது. இதில் 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த விதர்பா அணி முதல் இன்னிங்சில் 383 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. யாஷ் ரதோட் 54 ரன்களிலும், அக்ஷய் வாத்கர் 34 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மும்பை தரப்பில் ஷிவம் துபே 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய மும்பை ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரர் ஆன ஆகாஷ் ஆனந்த் நிலைத்து விளையாட மறுமுனையில் தொடர்ச்சியாக விக்கெட்டுகள் இழந்த வண்ணம் இருந்தது.

முன்னணி வீரர்களான ரகானே 18 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் மற்றும் ஷிவம் துபே இருவரும் டக் அவுட் ஆனதும் மும்பை அணிக்கு பின்னடைவை கொடுத்தது. 2-வது நாள் ஆட்ட முடிவில் மும்பை 7 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களுடன் தடுமாறியது. ஆகாஷ் ஆனந்த் 67 ரன்களுடனும், தனுஷ் கோட்டியான் 5 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இதனையடுத்து இன்று 3-நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆகாஷ் ஆனந்த் சதம் விளாசி அசத்தினார். அவர் 106 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் மும்பை அணி 92 ஓவர்களில் 270 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 113 ரன்கள் விதர்பா அணி முன்னிலையி உள்ளது.

Tags:    

Similar News