ரோகித் எல்லா காலத்திலும் சிறந்த கேப்டன்களில் ஒருவர்- வருண் சக்கரவர்த்தி
- பவர்பிளேயில் 2 ஓவர்கள், டெத் ஓவர்களில் 2 முதல் 3 ஓவர்கள் வரை பந்து வீசினேன்.
- மிடில் ஓவர்களில் விக்கெட் தேவைப்படும் போதெல்லாம் பந்து வீசினேன்.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்து முடிந்தது. இதன் இறுதிப்போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த தொடரில் இடம் பிடித்த தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி சிறந்த பந்து வீச்சை வெளிப்படுத்தினார். முதல் 2 லீக் போட்டிகளில் ஆடும் லெவனில் இடம்பெறாத அவர் 3-வது லீக் போட்டி மற்றும் நாக் அவுட் சுற்றில் களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில் ரோகித் சர்மா தன்னை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார் என்று தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ரோகித் சர்மா என்னை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார். பவர்பிளேயில் 2 ஓவர்கள், டெத் ஓவர்களில் 2 முதல் 3 ஓவர்கள் வரை பந்து வீசினேன். மிடில் ஓவர்களில் விக்கெட் தேவைப்படும் போதெல்லாம் பந்து வீசினேன்.
இப்படித்தான் என் திறனை அதிகப்படுத்த முடியும் என்று நான் அவரிடம் சொன்னேன், நான் சொல்லாமலேயே அவர் அதைப் புரிந்துகொண்டார். ஏனென்றால் அவர் எல்லா காலத்திலும் சிறந்த கேப்டன்களில் ஒருவர்.
இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.