null
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 14,000 ரன்களை அதிவேகமாக கடந்து கோலி சாதனை
- சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவுக்கு 242 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பாகிஸ்தான்
- சச்சின், சங்ககாராவிற்கு பிறகு இந்த சாதனையை கோலி படைத்துள்ளார்.
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரின் 5-வது லீக் போட்டி இன்று துபாயில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதனையடுத்து 242 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 18 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் 102 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் ரன்னிலும் கில் 46 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இப்போட்டியில் நிதானமாக விளையாடி வரும் கோலி 15 ரன்கள் அடித்தபோது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 14,000 ரன்களை அதிவேகமாக கடந்து கோலி சாதனை படைத்துள்ளார்.
சச்சின், சங்ககாராவிற்கு பிறகு இந்த சாதனையை படைத்த 3 ஆவது வீரர் என்ற பெருமையை கோலி பெற்றார். 36 வயதான கோலி, 287 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இந்த சாதனையை படைக்க சச்சின் 350 இன்னிங்ஸ்களிலும் சங்ககாரா 378 இன்னிங்ஸ்களிலும் 14,000 ரன்களை கடந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.