விளையாட்டு
சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி முதல் சுற்றில் வெற்றி
- சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் இன்று முதல் 23-ந் தேதி வரை நடக்கிறது.
- இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
பாசெல்:
மொத்தம் ரூ.2¼ கோடி பரிசுத் தொகைக்கான சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 23-ந் தேதி வரை நடக்கிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இந்திய வீரர் லக்ஷயா சென், எச்.எஸ்.பிரனாய், ஆயுஷ் ஷெட்டி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில் முதல் சுற்றில் இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி- மலேசியா வீரர் சோழன் காயன் உடன் மோதினார். இதில் இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி 21-12, 21-15 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.