டென்னிஸ்
கத்தார் ஓபன்: காலிறுதிக்கு முன்னேறியது போபண்ணா ஜோடி
- கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது.
- இதில் ஆண்கள் இரட்டையரில் போபண்ணா ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது.
தோஹா:
கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-போர்ச்சுகலின் நுனோ போர்கஸ் ஜோடி, இத்தாலியின் அண்ட்ரியா வவசோரி-சைமன் போலேலி ஜோடியுடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய போபண்ணா ஜோடி 7-6 (7-2), 7-6 (7-4) என வென்று காலிறுதிக்கு முன்னேறியது.