டென்னிஸ்
கத்தார் ஓபன்: அரையிறுதிக்கு முன்னேறியது யூகி பாம்ப்ரி ஜோடி
- கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது.
- இதில் ஆண்கள் இரட்டையரில் யூகி பாம்ப்ரி ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது.
தோஹா:
கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-குரோசியாவின் இவான் டோடிக் ஜோடி, எல்-சால்வடாரின் மார்சலோ-குரோசியாவின் மேட் பாவிக் ஜோடியுடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய யூகி பாம்ப்ரி ஜோடி 2-6, 6-3, 10-8 என வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.