டென்னிஸ்
null

துபாய் ஓபன் டென்னிஸ்: ரிபாகினா, முச்சோவா அரையிறுதிக்கு முன்னேற்றம்

Published On 2025-02-21 01:45 IST   |   Update On 2025-02-21 02:48:00 IST
  • ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
  • இதில் கஜகஸ்தான் வீராங்கனை ரிபாகினா காலிறுதியில் வெற்றி பெற்றார்.

துபாய்:

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.

இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் நம்பர் 6 வீராங்கனையும், கஜகஸ்தானைச் சேர்ந்தவருமான எலினா ரிபாகினா, அமெரிக்காவின் சோபியா கெனின் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ரிபாகினா 6-2, 7-6 (7-2) என வென்று அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் செக் நாட்டு வீராங்கனையான முச்சோவா 6-2, 7-5 என்ற செட் கணக்கில் ரோமேனியாவின் சொரானா சிர்ஸ்டியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

Tags:    

Similar News