தமிழ்நாடு
ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று திடீர் டெல்லி பயணம்- சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை என தகவல்
- ஆளுநர் ரவியுடன் அவருடைய செயலாளர், உதவியாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஆகியோரும் செல்கின்றனர்.
- உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் மீது தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கு நாளை விசாரணை.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட 10 மசோதாக்களை, நேற்று சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்ட நிலையில், ஆளுநர் ரவி தீடிரென டெல்லி புறப்படுகிறார்.
அதன்படி, இன்று மாலை 5.15 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னையில் இருந்து டெல்லி செல்கிறார். ஆளுநர் ரவியுடன் அவருடைய செயலாளர், உதவியாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஆகியோரும் செல்கின்றனர்.
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் சட்ட நிபுணர்களை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே, உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் மீது தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.