தமிழ்நாடு

மதுரை ரெயில் தீ விபத்தில் பெண்கள் உள்பட 20 பேர் படுகாயம்

Published On 2023-08-26 06:09 GMT   |   Update On 2023-08-26 06:09 GMT
  • தீ விபத்து நடந்தபோது ரெயில் பெட்டியில் 30-க்கும் மேற்பட்டோர் இருந்துள்ளனர்.
  • 6 பேர் விபத்து நடந்தபோது ரெயில் பெட்டியில் இருந்து குதித்து காயங்களுடன் உயிர் தப்பினர்.

மதுரை:

மதுரை ரெயில் நிலையம் அருகே இன்று காலை நடந்த தீ விபத்தில் சிக்கியவர்கள் பெரும்பாலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான். இந்த விபத்து நடந்தபோது ரெயில் பெட்டியில் 30-க்கும் மேற்பட்டோர் இருந்துள்ளனர். இதில் 9 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்தனர். பெண்கள் உள்பட 20 பேர் படுகாயமடைந்தனர். 6 பேர் விபத்து நடந்தபோது ரெயில் பெட்டியில் இருந்து குதித்து காயங்களுடன் உயிர் தப்பினர்.

காயமடைந்த 20 பேரில் 2 பேர் மதுரை ரெயில்வே ஆஸ்பத்திரியிலும், 5 பேர் தனியார் ஆஸ்பத்திரியிலும், மற்றவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

Tags:    

Similar News