தமிழ்நாடு

புயல்-மழையில் மெட்ரோ ரெயில் சேவையில் தடையில்லை

Published On 2022-12-10 14:37 IST   |   Update On 2022-12-10 14:37:00 IST
  • மெட்ரோ ரெயில் சேவை 2 வழித்தடத்திலும் தடையில்லாமல் இயக்கப்பட்டன.
  • புயல், மழையின் தாக்கம் இரவில் அதிகமாக இருந்த போதிலும் மெட்ரோ ரெயில் பயணிகள் பயணத்தை தொடர்ந்தனர்.

சென்னை:

புயல் மழை காரணமாக சென்னையில் பஸ் போக்குவரத்து தடைப்பட்ட போதும் எக்ஸ்பிரஸ், மின்சார ரெயில் சேவை வழக்கம் போல் செயல்பட்டன.

மெட்ரோ ரெயில் சேவையும் 2 வழித்தடத்திலும் தடை யில்லாமல் இயக்கப்பட்டன. புயல், மழையின் தாக்கம் இரவில் அதிகமாக இருந்த போதிலும் மெட்ரோ ரெயில் பயணிகள் பயணத்தை தொடர்ந்தனர்.

Tags:    

Similar News