தமிழ்நாடு

படிப்படியாக மதுக்கடைகளை மூடுவதுதான் மாநாட்டின் நோக்கம்- திருமாவளவன்

Published On 2024-09-16 05:56 GMT   |   Update On 2024-09-16 05:56 GMT
  • மதுவிலக்கு கொள்கை வரையறுக்க கட்சிகளை ஒருங்கிணைப்பது, படிப்படியாக மதுக்கடைகளை மூடுவதுதான் மாநாட்டின் நோக்கம்.
  • அரசியலுக்காக மாநாடு நடத்தவில்லை.

சென்னை:

சுதந்திரப் போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான ராமசாமி படையாச்சியாரின் 107-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதனையடுத்து திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மதுவிலக்கு மாநாட்டிற்கு முதலமைச்சருக்கு நேரில் அழைக்க வந்துள்ளேன்.

மதுவிலக்கு கொள்கை வரையறுக்க கட்சிகளை ஒருங்கிணைப்பது, படிப்படியாக மதுக்கடைகளை மூடுவதுதான் மாநாட்டின் நோக்கம்.

மதுஒழிப்பு மாநாட்டின் முதன்மையான நோக்கம் 2.

1. அரசு மதுபான கடைகளை படிப்படியாக குறைக்க வேண்டும்.

2. தேசிய கொள்கையை வரையறுக்க அனைத்து கட்சியினரும் ஒருங்கிணைந்து குரலெழுப்ப வேண்டும். திமுகவுக்கும் அந்த வேண்டுகோளை வைக்கிறோம்.

அரசியலுக்காக மாநாடு நடத்தவில்லை. இந்த நோக்கத்தில் உறுதியாக இருக்க வேண்டும்.

பாமகவோடு சேர்ந்து செயல்பட முடியாதபடி அவர்கள் தான் எங்களுக்கு நெருக்கடி கொடுத்தார்கள். நாங்கள் நெருக்கடி கொடுக்கவில்லை என்று கூறினார்.

Tags:    

Similar News