தமிழ்நாடு
மார்ச் 6, 7 தேதிகளில் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 16 ரெயில்கள் ரத்து
- எழும்பூர் - கோடம்பாக்கம் ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது.
- மார்ச் 6, 7 ஆகிய தேதிகளில் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
எழும்பூர் - கோடம்பாக்கம் ரெயில் நிலையங்களுக்கு இடையே நடைபெற உள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக ரெயில் நிலைய ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, வருகிற 6, 7 ஆகிய தேதிகளில் பகல் 12.30 மணி முதல் 2 மணி வரை சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே 16 ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.