தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் - அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றம்
- தொகுதி மறுசீரமைப்பை 30 ஆண்டுகளுக்கு ஒத்திவைப்பதாக பாராளுன்றத்தில் பிரதமர் அறிவிக்க வேண்டும் என தீர்மானம் வாசிக்கப்பட்டது.
- அரசியல் வேறுபாடுகளை கடந்து அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை:
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தை, பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட 5 கட்சிகள் புறக்கணித்த நிலையில் 56 கட்சிகள் பங்கேற்றன.
இக்கூட்டத்தில், 2026 மக்கள் தொகை அடிப்படையில் மேற்கொள்ள உள்ள தொகுதி மறுவரையறையை 30 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்றும் 1977 மக்கள் தொகை அடிப்படையில் வரையறுக்கப்பட்ட தொகுதிகள் மேலும் 30 ஆண்டுகளுக்கு நீடிக்க வேண்டும். தொகுதி மறுசீரமைப்பை 30 ஆண்டுகளுக்கு ஒத்திவைப்பதாக பாராளுன்றத்தில் பிரதமர் அறிவிக்க வேண்டும் என தீர்மானம் வாசிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, அரசியல் வேறுபாடுகளை கடந்து அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.