அனைத்துக்கட்சி கூட்டம் என்ற ஓரங்க நாடகம்- ஜெயக்குமார் விமர்சனம்
- ஓரங்க நாடகம் நடந்தது போல்தான் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது.
- நீட், காவிரி விவகாரம், மீனவர் பிரச்சனையில் தி.மு.க. அரசு எடுத்த நடவடிக்கை என்ன?
தொகுதி மறுசீரமைப்பு விவாதம் தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்ற அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் நடத்தப்பட்ட அனைத்துக்கட்சி கூட்டம் நாடகமாகவே தோன்றுகிறது.
* ஓரங்க நாடகம் நடந்தது போல்தான் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது.
* அவசரப்பட்டு எதற்காக அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது?
* தொகுதி மறுவரையறை குறித்து மத்திய அரசு இன்னும் எதுவும் சொல்லவில்லை.
* நீட், காவிரி விவகாரம், மீனவர் பிரச்சனையில் தி.மு.க. அரசு எடுத்த நடவடிக்கை என்ன?
* கச்சத்தீவு, காவிரி, நீட் விவகாரத்தில் மாநிலத்தின் உரிமைகளை தாரை வார்த்தது போல் இதனையும் விட்டு விடாதீர்கள்.
* 1971 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 848 எம்.பி. இடங்களை அதிகரிக்க வேண்டும்.
* தமிழ்நாட்டை தி.மு.க. தான் காப்பாற்றுவது போல் தோற்றத்தை உருவாக்க நாடகம்.
* நாடகம் விடும் நேரம்தான் உச்ச காட்சி நடக்குதம்மா என்ற கமல் பாடலைப்போல் தான் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது என்று கூறினார்.