தமிழ்நாடு

கடந்த 2 மாதங்களில் 550 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல்: சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி

Published On 2025-03-05 20:49 IST   |   Update On 2025-03-05 20:49:00 IST
  • அரசு உயர் அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற மாட்டோம் என உறுதிமொழி எடுத்து பணியாற்றி வருகின்றனர்.
  • நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்ற ஆட்சியர் உள்ளிட்ட வருவாய் துறையினர் 3 ஆண்டுகள் காலதாமதம் செய்கின்றனர்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா ஆஜராகி விளக்கம் அளித்தார்.

அப்போது நீதிபதிமன்றம் "கடந்த 2 மாதங்களில் மட்டும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 550 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசு உயர் அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற மாட்டோம் என உறுதிமொழி எடுத்து பணியாற்றி வருகின்றனர்.

நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்ற ஆட்சியர் உள்ளிட்ட வருவாய் துறையினர் 3 ஆண்டுகள் காலதாமதம் செய்கின்றனர்" என கருத்து தெரிவித்தது.

அதனைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்ட நிலையில் வழக்கு விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Similar News