தமிழ்நாடு

வரும் 10-ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிப்பு

Published On 2025-03-05 19:58 IST   |   Update On 2025-03-05 19:58:00 IST
  • திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி விடுமுறை.
  • விடுமுறையை ஈடு செய்யும் விதமாக, 15-ஆம் தேதி வேலை நாளாக அறிவிப்பு.

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி வரும் 10-ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

10-ஆம் தேதி உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக, 15-ஆம் தேதி வேலை நாளாக அறிவித்து புதுக்கோட்டை ஆட்சியர் அறிவித்துள்ளார்.

10-ஆம் தேதி நடைபெறும் அரசு பொதுத்தேர்வுகள் வழக்கம்போரல் நடைபெறும் எனவும் ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தற்போது 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில், இன்று 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது.

Tags:    

Similar News