தமிழ்நாடு

திருவண்ணாமலைக்கு நாளை, 350 சிறப்பு பஸ்கள் இயக்கம்

Published On 2025-03-12 11:52 IST   |   Update On 2025-03-12 11:52:00 IST
  • வார இறுதியில் பயணிப்பதற்காக 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.
  • பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை:

பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல இருக்கும் பக்தர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு 350 சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பவுர்ணமியையொட்டி சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு நாளை (13-ந்தேதி) 350 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து வார இறுதிநாள் விடுமுறையையொட்டி சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 14, 15-ந் தேதிகளில் 545 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

மேலும் கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 51 பஸ்களும், மாதவரத்தில் இருந்து 20 பஸ்களும் என 616 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. வார இறுதியில் பயணிப்பதற்காக 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.

வருகிற 16-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்புவதற்கு வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News