தமிழ்நாடு
ஊசி மூலம் ரசாயனம் செலுத்தப்பட்ட 8 டன் தர்பூசணிப் பழங்கள் அழிப்பு

ஊசி மூலம் ரசாயனம் செலுத்தப்பட்ட 8 டன் தர்பூசணிப் பழங்கள் அழிப்பு

Published On 2025-03-21 14:59 IST   |   Update On 2025-03-21 16:25:00 IST
  • 3 கடைகளில் விற்பனை செய்த தர்பூசணி பழங்களில் ரசாயன நிறமூட்டிகளை கலந்திருந்தது தெரியவந்தது.
  • கடை உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

தளி:

கோடை காலம் தொடங்கி விட்டதால் உணவுப் பொருட்கள், பழங்கள் மற்றும் கூல்டிரிங்ஸ் ஆகிய பொருள்கள் பொது மக்களுக்கு தரம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறதா என சோதனைகளை மேற்கொள்ள உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு கிருஷ்ணகிரி கலெக்டர் தினேஷ்குமார் உத்தரவிட்டிருந்தார்.

அதன் பேரில் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் வெங்கடேசன் மேற்பார்வையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஓசூர், சூளகிரி, தளி கெலமங்கலம் போன்ற பகுதிகளில் உணவு பொருட்கள், பழங்கள் விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வுகளை மேற்கொண்டு வந்தனர்.

அதன் தொடர்ச்சியாக தேன்கனிக்கோட்டை பகுதியில் ஓசூர் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி முத்து மாரியப்பன் தலைமையில் அதிகாரிகள் பிரகாஷ் மற்றும் சந்தோஷ் மற்றும் உணவு பகுப்பு ஆய்வாளர் கார்த்திக் ஆகியோர் அடங்கிய குழுவினர் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் தேன்கனிக்கோட்டை அஞ்செட்டி சாலையில் இருந்த 3 கடைகளில் விற்பனை செய்த தர்பூசணி பழங்களில் ரசாயன நிறமூட்டிகளை கலந்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த கடைகளில் இருந்து சுமார் 8 டன் அளவில் தர்பூசணி பழங்களை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து, அதன் கடை உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். 

Tags:    

Similar News