தமிழ்நாடு
VIDEO: விசாகப்பட்டினத்தில் தடுப்புச் சுவரை இடித்துக்கொண்டு பாய்ந்த லாரி - 2 பேர் காயம்
- இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் மற்றும் சாலையில் சென்ற ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
- நல்வாய்ப்பாக பூங்காவில் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்த மணல் லாரி, திடீரென ஏற்பட்ட ப்ரேக் செயலிழப்பால் தடுப்புச் சுவரை இடித்துக்கொண்டு சிறுவர் பூங்காவில் பாய்ந்தது.
இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் மற்றும் சாலையில் சென்ற ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. நல்வாய்ப்பாக பூங்காவில் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் .
இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.