தமிழ்நாடு

மாவட்டப் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் 24-ம் தேதி நடைபெறும்: அ.தி.மு.க. அறிவிப்பு

Published On 2025-02-18 14:34 IST   |   Update On 2025-02-18 14:34:00 IST
  • அ.தி.மு.க. தலைமை கழகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
  • மாவட்டப் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் வரும் 24-ம் தேதி நடைபெறுகிறது.

சென்னை:

அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், வரும் 24-ம் தேதி மாலை 4 மணிக்கு, புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டப் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இதில் பூத் கமிட்டி அமைப்பது, கழக வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்துவது, கழக இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணியில் விளையாட்டு வீரர்களை அதிக அளவில் சேர்ப்பது முதலான பணிகளை விரைந்து முடிப்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்டப் பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News