தமிழ்நாடு
அரியலூர்: கார் தீப்பிடித்து எரிந்ததில் ஒருவர் பலி- போலீசார் விசாரணை
- கார் எரிவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் போராடியும் அன்பழகனை மீட்க முடியவில்லை.
- சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் இன்று அதிகாலையில் சாலை தடுப்பில் மோதிய கார் தீப்பற்றி எரிந்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இன்று அதிகாலை சாலை தடுப்பில் மோதிய வேகத்தில் கார் தீப்பற்றி மளமளவென எரிந்ததில் வெளியேற முடியாமல் காரை ஓட்டி வந்த ஹோட்டல் உரிமையாளரான அன்பழகன் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார்.
கார் எரிவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் போராடியும் அன்பழகனை மீட்க முடியவில்லை. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து காருக்குள் இருந்து அன்பழகனின் உடலை மீட்டனர்.
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.