தமிழ்நாடு
களத்திற்கே வராத தலைவரின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்க தேவையில்லை- மேயர் பிரியா
- பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய தி.மு.க. அரசை நாம் எல்லோரும் சேர்ந்து மாற்றுவோம் என்று த.வெ.க. தலைவர் கூறி இருந்தார்.
- இந்தியாவிலேயே சென்னை மாநகராட்சி தான் பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக உள்ளது.
பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய தி.மு.க. அரசை நாம் எல்லோரும் சேர்ந்து மாற்றுவோம் என்று மகளிர் தின வாழ்த்து வீடியோவில் த.வெ.க. தலைவர் விஜய் கூறி இருந்தார்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என த.வெ.க. தலைவர் கூறியது குறித்த கேள்விக்கு சென்னை மேயர் பிரியா கூறியதாவது:
* களத்திற்கே வராத தலைவரின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்கத் தேவையில்லை.
* இந்தியாவிலேயே சென்னை மாநகராட்சி தான் பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.